யாழ். சாவகச்சேரி சங்கத்தானை சாரதாவீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானசுந்தரம் சொர்ணம்மா அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி எதிர் வரும் 13-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 12:00 மணி முதல் மாலை வரை அன்னாரின் இல்லத்தில் நடைபெற இருப்பதனால் தாங்களும் தங்கள் குடும்பம் சார்ந்து பங்கேற்று, நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
ஆழ்ந்த இரங்கல் துயர் பகிர்ந்து கொள்ளுகிறோம்