யாழ். சரசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பூங்கோதை வைரவிப்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.
அம்மாவின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரங்களையும் பதாகைகளையும் வெளியிட்டவர்களுக்கும், சமய கிரியைகளை இயற்றியோர்க்கும், நிகழ்வின் நினைவுகளை நினைவு மலரில் பதிவு செய்தோர்க்கும், நினைவு மலரை தொகுத்து வெளியிட்ட அச்சுக்கூடத்தினருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.