Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 18 MAR 1941
இறப்பு 23 OCT 2023
திருமதி ஞானாம்பிகை சிவபாதம் 1941 - 2023 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சிங்கப்பூர், யாழ். கரவெட்டி வடக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை சிவபாதம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எங்கள் வீட்டு குலதெய்வமே
எங்களை எல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத் துயில் கொண்டு
நாட்கள் 31 ஆனாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் நெஞ்சை விட்டகலாது!

உண்ணாமல் உறங்காமல் உனையிழந்து
ஓர் திங்கள் ஆனதுவோ...?
என்னே கொடுமையிது
இறைவனுக்கும் இதயமில்லை

உன் உயிரில் பாதி தந்தாய் அம்மா
நான் விடும் மூச்சிலே
உன் கருவறை வெப்பம் உணர்கின்றேன்
என் சிரிப்பினிலே
நீ பட்ட துன்பம் காண்கின்றேன்..

உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

திதி வெண்பா :
சித்திபுத்திச் சிந்தாமணிப்பதி அருள்களல் பூகண்டமங்கல ஐப்பசித்திங்களாறில் அமிர்த நவமியன்று மங்களமாய் சிவத்தை நீத்தே ஞானம் அம்பிகை பாகன் பாதம் பற்றினார் பற்றற்று.

திதி வெண்பா விளக்க உரை :
விளக்க உரை சிந்தாமணி விநாயகர் அருளுடன் மங்கல வருடத்தில் ஐப்பசி 6ம் திகதி அமிர்தயோக நவமியில் இறுதியாக சிவபாதத்தை விட்டு ஞானாம்பிகை அம்பிகை பாகன் பாதம் பற்றியே பற்றறுத்தார்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 21-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப0 7:00 மணியளவில் கீரிமலை தீர்த்தக் கரையிலும், அதன்பின்னர் ந.ப 11:00 மணியளவில் அவரது இல்லதிலும் நடைபெறும் வீட்டுக்கிருத்திய மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 


இங்ஙனம், பிள்ளைகள்
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.