உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கட்டுவன் தண்ணித்தாழ்வைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிகுளத்தை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணேஷ் நாகமணி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் இருப்பிடமே பாசத்தின் உறைவிடமே எங்கள் அப்பா ஆசையாய் இருக்குதப்பா சிரித்த உங்கள் முகம் பார்க்க வந்திட மாட்டீர்களா?
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா-மூன்று வருடம் விரைந்தே போச்சுதப்பா நீங்கள் எங்களுடன் வாழ்வதாய் நினைத்தே நாம் வாழ்கின்றோம் -ஆனாலும்
உங்கள் முகம் பார்க்க துடிக்கும் வேளையில் நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எம்நெஞ்சை விட்டு அகலாது உங்கள் நினைவுகள்
ஆண்டுகள் மூன்றென்ன எம் உயிர் மூச்சு உள்ளவரை என்றென்றும் உணர்வுடன் கலந்திருக்கும் உங்கள் அன்பும் நினைவுகளும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.