யாழ். திருநெல்வேலி கிழக்கு இராமலிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் சேவியர் வசந்தாதேவி அவர்கள் 10-05-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், சாமுவேல் எலிசபெத் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிரான்சிஸ் சேவியர்(பட்டாஸ் மாமா) அவர்களின் அன்பு மனைவியும்,
தர்ஷினி, சதீஸ்வரன்(பிரான்ஸ்), மதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சறோஜினிதேவி(கனடா), காலஞ்சென்றவர்களான யோகேந்திரநாதன், மகேந்திரநாதன் மற்றும் குணேந்திரநாதன்(ஜேர்மனி), கானகலாதேவி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தண்டாயுதம், செல்வகுமாரி, சரஸ்வதி, இரத்தினேஸ்வரி, நவரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சசிகலா அவர்களின் அன்பு மாமியாரும்,
றொசான், தனஞ்சியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details