முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் முடியப்பு அவர்கள் 22-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் வஸ்தியானாப்பிள்ளை(செல்லம்மா அக்கா- ஓய்வுநிலை ஊழியர், புதுக்குடியிருப்பு வைத்தியசாலை) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை(முன்னைநாள் முல்லை பட்டினத் தலைவர்), மார்கிறேட் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மேரிகிறேஸ்(சின்னாச்சி) அவர்களின் அன்புக் கணவரும்,
கிறேஷியன் வில்வராஜா(மின் இயந்திர இயக்குனர்- கரைத்துறைப்பற்று பிரதேசசபை- முல்லைத்தீவு), காலஞ்சென்ற மேரி எலன் சீற்றா, யூட்தவராஜா(ஜேர்மனி), புனிதமலர்(ஆசிரியை- வட்டுவாகல் அ.த.க பாடசாலை, முல்லைத்தீவு), காலஞ்சென்ற மேரி அஞ்சலீனா, அன்ரன் யோகராஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அருட்சகோதரி சீற்றா, மதலேனா, அன்ரன் அருள்நாதன், மரிசலீன், புஸ்பராணி, மேரிகிறேஸ், மரின பிளசம்ரூபி, பெனடிற்ஞானநாயகம், ராஜேஸ்வரி, நந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மரியமலர்(திட்டமிடல் பணிப்பாளர் மாவட்ட செயலகம்- வவுனியா), வில்வராசா(சாரதி பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகம்- முல்லைத்தீவு), சிந்துஜா(ஜேர்மனி), சுகந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிறோஷனா, தனோஷன், நிலக்ஷன், கெவின்(ஜேர்மனி), சஞ்சீவ்(லண்டன்), காலஞ்சென்ற சஞ்சிகா, சஜீவ், டொறின்ரன்(லண்டன்), எலன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-01-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் செல்வபுரம் புனித யூதாதேயு ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் முள்ளியவளை மாமூலை சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவுத்துயரால் வாடும் பிள்ளைகளுக்கும் , பேரப்பிள்ளைகளுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் , அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்....