Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 30 AUG 1947
மறைவு 30 MAY 2020
அமரர் ஏகாம்பரம் குணரெத்தினம்
இரத்தினம் களஞ்சியம் மாங்குளம்- கிளிநொச்சி முன்னாள் பிரபல வர்த்தகர்
வயது 72
அமரர் ஏகாம்பரம் குணரெத்தினம் 1947 - 2020 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை சிவபிரகாசம் வீதியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் குணரெத்தினம் அவர்கள் 30-05-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி(தேவி- புங்குடுதீவு 12ம் வட்டாரம்) அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தீபன்(இலங்கை), விமலரூபன்(லண்டன்), சஞ்ஜீபன்(கனடா), துஷீபன்(கனடா), சிந்துஷா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கார்த்திகா(இலங்கை), நந்தினி(லண்டன்), சுவிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்னலட்சுமி(இலங்கை), காலஞ்சென்றவர்களான நடராசா, சண்முகநாதன் மற்றும் தங்கராசா(ரஞ்சி- ஜேர்மனி), காலஞ்சென்ற ருக்குமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற நாகேசு, லோகசுந்தரி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி மற்றும் சரஸ்வதி, சிங்கராசா, தனலட்சுமி, பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

சவின், கிரிஷ், மகிஷ், மேஷிகா, ஆரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்