Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 28 OCT 1942
விண்ணில் 14 SEP 2021
அமரர் ஏகாம்பரம் செல்லப்பா
வயது 78
அமரர் ஏகாம்பரம் செல்லப்பா 1942 - 2021 புலோலி தெற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புலோலி தெற்கு காந்தியூரைப் பிறப்பிடமாகவும், புலோலி மந்திகையை வதிவிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் செல்லப்பா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

உங்களை பிரிந்து நாட்கள்
முப்பத்தொன்று கழிந்து போயிற்று
நாட்கள் மாதங்களாய் கழிந்து ஓடினாலும்
முப்பொழுதும் எப்பொழுதும் உங்கள்
நினைவுகள் நீங்காது துடிக்கின்றோம்
எம் அன்பை உங்கள் காலடியில்
நினைவு மலர்களாய் சமர்ப்பிக்கின்றோம்
ஒம் சாந்தி!! ஒம் சாந்தி!! ஒம் சாந்தி!

அன்னாரின் அந்தியேடிக்கிரியைகள் 14-10-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 04:30 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும், சபீண்டிகரணக் கிரியையிலும் ஆத்மசாந்திப் பிரார்தனையிலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் துயரச்செய்தி அறிந்து உதவிய உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் அனைவருக்கும் எம்மோடு துயரில் பங்கு கொண்டோருக்கும், உள்நாடு வெளிநாடுகளில் இருந்து தொலைபேசி, முகநூல் மூலம் அனுதாபங்களைத் தெரிவித்தோர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டோருக்கும் மற்றும் கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள், கண்ணீர் அஞ்சலி பதாதைகள் மூலம் அஞ்சலி செலுத்தியோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.