மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்றுவிட்ட அன்ரி... உங்கள் நினைவுகள் இன்னும் பசுமையாகவே உள்ளது. காலனும் காலமும் செய்து விட்ட துன்பியல் நிகழ்வில், எமது அன்பான உறவுகளை ஆரத் தழுவி ஆறுதல் கூற முடியாத கையறு நிலையில் நாம் இருப்பது வேதனையாகவுள்ளது. இருப்பினும் உள்ளத்து உணர்வுகளை இணையத்தில் பகிர்வதில் ஓரளவேனும் நிறைவடைகிறோம்.
அன்ரியின் பிரிவினால் கலங்கி நிற்கும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார்,சுற்றத்தார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்ரியின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மனதுருகி எல்லாம் வல்ல இறைவனை இரஞ்சுகிறோம்.
பாசம் மாறாத பசுமையான நினைவுகளுடன்........
மஞ்சு குடும்பத்தினர்.