யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், சுதந்திரபுரம் மத்தியை வதிவிடமாகவும் கொண்டிருந்த எட்வேட் சந்திரசேகரன் ரெஜினா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இறைவன் அருளிய அரிய வரமாக
எங்கள் வாழ்வில் வந்த அன்புத் தாயே,
அன்பையும், விசுவாசத்தையும்,
பணிவையும் உங்கள் வாழ்வால் எங்களுக்குக் கற்றுத் தந்தீர்
உங்கள் ஜெபங்கள் எங்கள் பலமாகவும்,
உங்கள் ஆசிகள் எங்கள் வழிகாட்டியாகவும் இருந்தன
நீங்கள் விதைத்த நற்குணங்கள் இன்றும்
எங்கள் வாழ்வில் மலர்கின்றன
காலங்கள் பல கடந்தாலும்,
உங்கள் நினைவுகள் ஒருபோதும் மங்காது
ஆண்டவரின் அரவனைப்பில் நீங்கள் இளைப்பாறுகிறீர்கள்
என்ற நம்பிக்கை எங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது
அன்புத் தாயே,
உங்கள் புனித நினைவை நன்றியுடனும்
மரியாதையுடனும் போற்றுகிறோம்
இறைவனின் நித்திய சமாதானத்தில் அமைதியாய்
இளைப்பாறுவீராக. ✝️💐