யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் சிவனேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
கடந்த 10-05-2021 திங்கட்கிழமை அன்று இறைபதமடைந்த எமது அன்புத் தெய்வம் பாலசுப்பிரமணியம் சிவனேஸ்வரி அவர்களின் அந்தியேட்டிக்கிரியைகள் 07-06-2021 திங்கட்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் வீட்டுக் கிருத்திய கிரியைகள் 09-06-2021 புதன்கிழமை அன்று அவரது இல்லத்திலும் நடைபெறவுள்ளது.
எமது அன்புத் தெய்வத்தின் பேரிழப்பால் செய்வதறியாது திகைத்து நின்ற வேளையில் நேரிலும் தொலைபேசி ஊடாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி பதாகைகளை வைத்து அஞ்சலி செலுத்தியோருக்கும், இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் எமக்கு பலவழிகளில் உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தற்போது கொரோனா தொற்றினால் நிலவும் இக்கட்டான சூழ்நிலை காரணமாக அனைவரையும் அழைக்க முடியாமைக்கு மிகவும் மனம் வருந்துகின்றோம்.
வீட்டு முகவரி
உரும்பிராய் கிழக்கு,
உரும்பிராய்.