
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதியை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் ஸ்ரீபாதன் அவர்கள் 23-02-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி பாலசிங்கம், சிவபாக்கியலக்ஷ்மி தம்பதிகளின் அருமை மூத்த புத்திரரும், காலஞ்சென்ற குருசாமி கனகசபாபதி, ராஜேஸ்வரி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலையரசி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரினி(2019 A/L- யாழ்/ இந்து மகளிர் கல்லூரி), ஹரிஹரன்(தரம் 10- யாழ்/ சென்ஜோன்ஸ் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வசந்தி(மல்லாவி), ஸ்ரீரங்கன்(கனடா), ஜெயந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காந்தரூபன்(மல்லாவி), கதிர்செல்வன்(கனடா), தனுஷா(கனடா), மங்கையகரசி(கனடா), கெளரீசன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உலகராஜா(கனடா), சோதிமாலா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
அஸ்வின், அஜெய், அகில் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஆரணி, பவதாரணி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
கஜந்தன், சர்மினி, தர்ஷிகா, துஷிக்கா, தயான், மாதேஷன், ஜெகதேஷன், கஜதேஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மண்டைதீவு தலைக்கீரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our thoughts and prayers are with your family