எனது அன்புச் சகோதரி சோதிக்கு எனது அன்பான இரங்கல் கண்ணீர் அஞ்சலி.
அன்புச் சிரகடித்து இன்பத் தென்றலாய் இனிமை சொறிந்த எங்கள் சோதியே உன் புன்முறுவலும் புகழ் பூத்த நின்முகமும் மண் உலகை விட்டு ஏகியதேனோ.
அன்புடனும் பன்புடனும் பாசமழைபொழிந்து நட்புடன் வாழ்ந்த சோதியே இன்று நாம் பாசமுடன்தேட எங்கே சென்றீரோ.
சடுதியாக விதிவசமாக நோயிற்றபோது
இரக்கமற்ற கொடியகாலன் உனது உயிரை மாய்த்து கவர்ந்து சென்றாலும் நீங்கள் எங்களுடனேயே வாழ்வீரே.
காலம் பிழைத்ததுவோ கண் பட்டுப்போனதுவோ காலண் கணக்கில் ஊழல் நிகழ்ததுவோ, காலை முடியுமுன்னே கோலம் அழிந்ததுபோல்
பாதி வழியினிலே பயணம் முடிந்ததுவோ.
பூக்கள் புற்களில் மறைந்திருந்தாலும் பனித்துளிகள் பள்ளத்தில் விழுந்தாலும்
கோடி நாட்கள் ஓடி மறைந்தாலும் காலம் கடந்து சோகம் குறைந்தாலும் கூடி இருந்த சேர்ந்த நினைவுகளை சிதறாது உள்ளத்தில் சேமித்து வைத்து விடுவோம்.
சோதி உனது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
பாசமுள்ள உனது செல்வாஅண்ணா.
செல்வா அண்ணி சுதா.
Rest in peace aunty! S. Rajaji