7ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் ஆதிநாயகம் சுந்தரலிங்கம்
                    
                    
                (ஓய்வுபெற்ற உப அதிபர்- மட்/ அரசினர் ஆசிரியர் கலா சாலை, ஓய்வுபெற்ற ரெட்பாணா உத்தியோகஸ்தர்)
            
                            
                இறப்பு
                - 13 JAN 2018
            
                                    
            
                    Tribute
                    1
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        மட்டக்களப்பு, பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், காரைதீவு, மட்டக்களப்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆதிநாயகம் சுந்தரலிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஏழு ஆனாலும்
மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும்
செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த அப்பா!
ஆண்டு ஏழு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள்
நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணி போல்
எம்மைக் காத்த அன்புத் தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்
விதித்ததோர் விதியதால்
விண்ணகம் சென்றதைப்
பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு முகம்
மறைந்தாலும் அழியாது நினைவலைகள்!
பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே!
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அப்பா!
                        தகவல்:
                        குடும்பத்தினர்