யாழ். ஈச்சமோட்டை கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் சின்னகுட்டி தியாகராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 08-02-2025 சனிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று Canada Kanthaswamy Temple Society (Scarborough) 733 Birchmount Rd, Scarborough, ON M1K 1R5 எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசனை நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.