யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Billund ஐ வதிவிடமாகவும் கொண்ட அருணாச்சலம் செல்வக்கதிரமலை அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை(சுவீப) செல்வரெத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வசந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
தவச்செல்வன், ரூபராணி, சத்யப்பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சஜிதா, பரணீதரன், ரமேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும், செல்வரெட்ணம், இராசமாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வமலர், நிர்மலாதேவி, காலஞ்சென்ற சாந்தகுமாரி, யோகேந்திரன், காலஞ்சென்ற சந்திரகுமாரி, சிவகுமார், பாலகுமார், காலஞ்சென்ற செல்வகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரீத்திகா, மதுமிதா, சினேகா, பானுஷா, தூயவன், கீர்த்தன், சயன், நிதன், ஆதன் ஆகியோரின் அருமைமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்பான பெரியப்பாவிற்கு, உங்கள் ஆத்மா சாந்தியடைய நானும், எங்கள் குடும்பத்தினர் அனைவரும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். பெரியம்மாவிற்கும், தம்பி செல்வன், தங்கைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும்...