
யாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன், காரைநகர் களபூமி விளானை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் சிற்றம்பலம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திரு உருவே
பாசத்தின் பிறப்பிடமே உங்கள் அன்பு முகம்
மறைந்தாலும் அழியாது நினைவலைகள்
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் அப்பா!
நீங்கள் இறையடி எய்து ஒன்பது ஆண்டு
நம்ப மனம் மறுக்கிறது இதயமெல்லாம்
வலிக்கிறது வேரற்ற மரமாய்
வேதனையில் துடிக்கிறோம் ஏன் மறைந்தீரோ?
எங்கள் விடிவெள்ளியே!
கடமைகள் நிறைவு கண்டு – இன்று
காலமோ ஒன்பது ஆண்டு ஆனது – என்று போறது
கதி தான் மோட்சம் பெற்றது நீங்கள்
எனினும் பாசத்தில் பரிதவித்தோம்
பரமமே தகுமோ எம் அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!