யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை ஆறுமுகம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 30-04-2022 சனிக்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் "புங்குடுதீவு கண்ணகிபுரம் (கண்ணகி அம்மன்) தீர்த்தக்கரையிலும்”, வீட்டுக்கிருத்திய கிரியைகள் எதிர்வரும் 02.05.2022 திங்கட்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து, அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன விருந்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
3ம் வட்டாரம், புங்குடுதீவு,
(பத்துவீட்டுத்திட்டம், யாழ்ப்பாணம்.)