Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 26 FEB 1946
மறைவு 22 DEC 2024
திரு ஆறுமுகம் பசுபதி
சுதா அரைக்கும் ஆலை உரிமையாளர்
வயது 78
திரு ஆறுமுகம் பசுபதி 1946 - 2024 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், 10ம் கட்டை விசுவமடுவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பசுபதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

இன்றோடு 31 நாட்கள்ஆனதுவே
நீங்கள் இல்லை 
 நினைக்கையில் வியக்கின்றேன்
 நிஜமாய் நான் வாழ்ந்தேனா?
 நினைவுகள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம்
 காணும் காட்சிகளில்
 கண்முன்னே நிற்கின்றீர்! 
அன்பாய் அப்பா என்று
 அழைத்திட யாருண்டு?
வேதனையை சொல்லிவிட
வார்த்தைகள் இல்லை
 மீண்டும் நீ வாரும் அப்பா!
 வாழ்ந்திட இவ்வுலகில் நீ
வரும் காலம் வரும் என எண்ணி
 வாழ்கின்றோம்...! உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.