
யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் குமாரசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
எங்கள் அன்புத் தெய்வம்
ஐயா நீங்கள்...!
ஓர் ஆண்டு கடுகதியில் கரைந்தோடிச் சென்றாலும்
உங்கள் நினைவுகள் கல்மேல் பொறித்த
எழுத்துக்கள் போல் எங்களை விட்டு அகலவில்லை.
ஐயா எங்கள் இன்ப துன்பங்களை நீங்கள் எம்
அருகிலிருந்து பங்கெடுத்துக்கொள்வதை நாம்
உணருகின்றோம் நீங்கள் இல்லையெனும்
நினைவே நெஞ்சுருக்கிக் கொல்லுதய்யா
நீங்கள் இறந்தாலும் என்றென்றும்
எங்களுக்கு இறைவன் நீங்கள் தான்.
என்றும் நினைவகலா நினைவுகளுடன்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் திதிக்கிரியை 22-07-2020 புதன்கிழமை அன்று வவுனியா பூந்தோட்டத்தில்லுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் அன்னாரின் கிரியையில் பங்குபெற்று சிறப்பித்துக்கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.