யாழ். கரவெட்டி வதிரி பத்தியவத்தையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கரணவாய் தெற்கு வலவன் தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கருணாநிதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அமரர் ஆறுமுகம் கருணாநிதி அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 17-05-2023 புதன்கிழமை அன்று அதிகாலை 04:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும். அதனைத்தொடர்ந்து மு.ப 11:00 மணியளவில் இடம்பெறும் சபிண்டிகரண கிரியைகளிலும் மதியபோசன நிகழ்விலும் தங்கள் குடும்ப சகிதம் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
வலவந்தோட்டம்,
கரணவாய் தெற்கு,
கரவெட்டி.