Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 18 NOV 1952
உதிர்வு 23 SEP 2022
அமரர் ஆறுமுகம் கந்தையா விவேகானந்தன் (சமூக சிரோமணி, சமூகசீலர்)
முன்னாள் மஸ்கெலியா எஸ்டேட் சிரேஷ்ட உதவி அதிகாரி, இணுவில் பரமானந்தவல்லி அம்மன் கோவில் தர்மகர்த்தா, லண்டன், வெம்பிளி, ஈழபதீஸ்வரர் ஆலய சக ஸ்தாபகர், ஆலய ஸ்தாபக நிர்வாக உறுப்பினர் மற்றும் ஆலய பொது முகாமையாளர்
வயது 69
அமரர் ஆறுமுகம் கந்தையா விவேகானந்தன் 1952 - 2022 யாழ் இணுவில் மேற்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இணுவில் மேற்கு பரமானந்தவல்லி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் கந்தையா விவேகானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:11/10/2023.

ஆண்டுகள் கடக்கிறது ஆனால்-நாட்கள்
போல் தெரிகின்றது உம் நினைவு
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உம் உறவுக்கு
நிகரில்லை யாருமே
உங்கள் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை
அப்பா... அப்பா........

மறைந்திட்டாயோ என்று நினைத்திட எங்கள்
விழிகள் நித்தம் கண்ணீரால் நனைகின்றது
கட்டிடங்கள் காலத்தால் சிதைந்து போகும்!
காசு பணம் வாழ்நாளில் கரைந்தே போகும்!
நல்லவையும் சில நேரம் வாழ்வில் தாழ்ந்து போகும்!
ஆனால் உன் ஞாபகங்கள் எந்நாளும் எம் நெஞ்சில் வாழும்

ஆயிரம் ஆண்டானாலும் அழியா உம் நினைவுகளும்
உம் அன்பும், பாசத்தொடரும் எம்மை விட்டுபிரியாது
அப்பா....... அப்பா........

வற்றாத உங்கள் நினைவுடன்
மனம் உருகி கலங்கி நிற்கின்றோம்
உங்கள் ஆன்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்...  

தகவல்: குடும்பத்தினர்