1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருளானந்தன் இராசலிங்கம்
1954 -
2023
சுதுமலை தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 26-05-2024
யாழ். சுதுமலை தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருளானந்தன் இராசலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவலை!
ஓராண்டு ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும்
துடிக்கின்றது எம் இதயம்
உங்கள் இனிய புன்னகை மீண்டும்
ஒருமுறை காண்போமா...
தரணியில் எங்களை தவிக்கவிட்டு
தனியாக நீங்கள் மட்டும் எங்கு சென்றீர்கள்...
நடந்தது கனவாகாதா என ஏங்குகின்றோம்
இல்லாளுக்கு தலைவன் இல்லை
பிள்ளைக்கு தந்தை இல்லை
சூரியனே! நீ இன்றி எங்களுக்கு
ஒளியே இல்லை...
இறைவனோடு நீங்கள் - கனத்த
இதயத்தோடு நாங்கள்...
உங்களை இழந்து வாழும் எங்கள் வலி
காலத்தாலும் ஆற்றமுடியாதது
உங்கள் ஆத்மசாந்திக்காக வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்!
பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்,ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் ஓம் சாந்தி சாந்தி தெ.விக்னேஸ்வரன்