Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 OCT 1944
இறப்பு 10 JUN 2019
அமரர் அருளானந்தம் தவமணிதேவி 1944 - 2019 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.


யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருளானந்தம் தவமணிதேவி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கடவுளாக கிடைத்த பொக்கிஷத்தை தொலைத்து
இன்றோடு பன்னிரு மாதம்!!!
அம்மா! நெஞ்சமெல்லாம் உங்கள் நினைவுகளை சுமந்தபடியே
எம் நாட்கள் மீளுகின்றது!

எங்கே அம்மா சென்றாய்
எங்களை எல்லாம் விட்டு விட்டு
எம்மை வாட்டும் இந்த சோகத்தை
தீர்த்து வைக்க வாருங்கள் அம்மா..!

ஆசையாய் நேசமாய் வளர்த்த பிள்ளைகளும்
பாசமாய் பண்புடன் வளர்த்த பேரப்பிள்ளைகளும்
உன்னை இழந்து தவிக்கின்றனர் தினந்தோறும்!

எங்களை தவிக்கவிட்டு
இமைகளை மூடி விட்டீர்கள்
எம்மையெல்லாம் அழவிட்டு
இறைவனை நாடிவிட்டீர்கள்

எத்தனை காலம் போனாலும்
எம் ஜீவன் உள்ள மட்டும்
உன் நினைவு மாறாது
உன் உறவுகள் மறக்காது

உன் பிரிவால் துயருறும்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.   

தகவல்: மகள்மார்