Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 24 OCT 1944
இறப்பு 10 JUN 2019
அமரர் அருளானந்தம் தவமணிதேவி 1944 - 2019 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருளானந்தம் தவமணிதேவி அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

காற்றோடு பூ உறவாடுவதை போல-எங்கள்
மனதோடு மனம் உறவாட நீங்கள் இல்லை அம்மா!

காற்று எத்திசையில் திக்கிமுக்கி திரிந்தாலும்
என்றும் பூவின் வாசத்தை இழக்காது!

உங்கள் பிள்ளைகள் உங்கள் வாசத்தை தவிர
வேறு சுவாசத்தை சுகிக்கமாட்டோம் அம்மா....!

என்றும் உங்கள் அன்புக்கு ஏங்கும்
பிள்ளைகள்,மருமக்கள், பேரப்பிள்ளைகள்...

எமது அன்புத் தெய்வம் இறையடி எய்திய செய்தி கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோர்களுக்கும், தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்க்கும், உற்றார், உறவினர்க்கும், நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை La Salle jeanne d'arc, 50 place de Torcy, 75018 Paris, France எனும் முகவரியில் மு.ப 11:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும்  அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்