9ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குருநகர் ஓடக்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அருளானந்தம் மரியதாஸ் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
என்னை சீவியத்தில் நேசித்தவர்களே
என் மரணத்திலும் மறவாதீர்கள்
ஆறாத் துயரத்தில் எம் அனைவரையும்
மூழ்க விட்டு விட்டு
மீளாத் துயிலில் ஆழத் தூங்கிவிட்ட
எம் குடும்ப தலைவா
ஆண்டுகள் ஒன்பது தான் இங்கு
கடந்து வந்து விட்டாலும்
ஆற்றிடவிட முடியவில்லை
இவ்வுலகில் எம் துயரத்தை
வராதோ இனியொரு நாள்
இம் மண்ணில் உங்களோடு
மகிழ்வோடு நாமும் இனிதே கழித்திருப்பதற்கு
இருந்தால் உறவு பிரிந்தால் நினைவு
அவ்வளவு தான் வாழ்க்கை இது தான் உண்மை
தீராத துயரத்திலும் தெய்வமான உங்களின்
ஆத்மா சாந்தி பெற துதிக்கின்றோம்
நீங்கா நினைவுகளுடன் பிராத்திக்கும்
உங்களின் அன்பிற்கு ஏங்கும்
அன்பு மனைவி(சிறி), மக்கள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்:
சிறீதனம்(சிறி)