
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Egerkingen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருளம்மா ஜீவராணி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அந்தோ அன்னக் கிளிபோன்ற
அழகிய மகளே ஜீவராணி
உந்தன் பிரிவால் இன்றும்நாம்
ஒவ்வொரு கணமும் துடிக்கின்றோம்!
அணையா தீபம் அணைந்ததேனோ?
எங்கள்அன்புச் செல்வம் மறைந்ததேனோ?
பாசமுள்ள சகோதரியே எம்மை
பரிதவிக்க விட்டு பறந்து நீ சென்றதும் ஏனோ?
பண்பான ஓர் மகளாய்
பாசமிகு சகோதரியாய்
கண்டிப்பும் கருணையும் கொண்ட அம்மாவாக
வாழ்வாங்கு வாழ்ந்து நீர்
வழிநடுவில் ஏன் மறைந்தாய்
அம்மா உன்னைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை,
உன் அன்பிற்கு இணை யாருமில்லை
உன் பாசத்திற்கு ஏங்கும் எங்கள் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் எங்களை கொல்கிறது.
விழிகள் சொரிகிறது
நிரப்ப முடியா வெற்றிடத்தை உருவாக்கி
எம்மை நிலைதடுமாற வைத்து
எங்கு சென்றாய் அம்மா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.