யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருளம்பலம் கமலசேகரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எம்மை எல்லாம் நீங்காத நினைவில் தவிக்கவிட்டு
எம்மை விட்டு பிரிந்து 31ம் நாள் ஆகிவிட்டதே அப்பா!
இறைவனின் பாதடியில் நிரந்தர ஓய்விற்காக
சென்ற எங்கள் அன்புத் தெய்வமே அப்பா!
31 நாள் அல்ல ஓர் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும்
நாம் உங்களை மறவோம் அப்பா!
தாங்காத துயரோடு தவிக்கின்றோமே அப்பா!
தரணியில் உங்களை எப்போ காண்போம் அப்பா!
உங்கள் பணியைத் தொடர இனி யார் வருவாரோ?
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
உங்களை மறக்க முடியாமல்
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உடன் பிறப்புக்கள்.
அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும் எம்முடன் சேர்ந்து துன்ப துயரங்களில் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் மற்றும் அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
My deepest Symapaties. May his Soul rest in peace