யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், மன்னார் நானாட்டான் ஆண்டார் செட்டிவெளியை வதிவிடமாகவும் கொண்ட ஆரோக்கியநாதர் அக்னேஸ் அம்மா அவர்களின் நன்றி நவிலல்.
பாசத்தின் இருப்பிடமாய்
காவியமாய் சிந்தையில் எழுந்து
ஒவியமாய் நெஞ்சினில் நிறைந்த
அருமைத் தாய் நீரலலோ
வேண்டுவதெல்லாம் தேடித் தந்து
தேவையெல்லாம் நிறைவு செய்து
அனைவரையும் உபசரிக்கும் பண்பால்
சொத்து சுகங்களுடன் சொந்தங்களையும்
சேர்த்தீரே.
மடு அன்னையின் அரவணைப்பில் இருந்தாலும்
கதிரை அன்னையை மறவாது
சில்லையூர் நாடி ஓடி வந்தீரே
வரும் துன்பங்கள் அனைத்தையும்
மன தைரியத்துடன் எதிர் கொண்டீரே
வாழ்விலும், தாழ்விலும் அரவணைத்தீரே
வான் வீட்டில் இருந்தாலும் உம் பாசமான
வார்த்தைகளை மறக்க முடியுமோ
எம் அனைவரின் உணர்வுக்காய்
உழைத்தீரே
நினை வலைகளில் நனைந்து
உள்ளம் நெகிழ்ந்து
உருகின்றோம்.
உம் ஆன்ம சாந்திக்காக இறையருள்
வேண்டுகின்றோம்.
இவரின் பிரிவால் துயருறும் கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்.
அன்னாரின் ஆன்மா இளைபாற்றிக்காக 29-04-2021 வியாழக்கிழமை அன்று காலை 06:00 மணியளவில் நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திலும் சில்லாலை புனித கதிரைமாதா ஆலயத்திலும் ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலியில் பங்குபற்றி வேண்டுதல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.