1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
12
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரிநேசராஜா மஞ்சுளா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வருடம் ஒன்றாகிற்று இம்
மண்ணைவிட்டு நீ சென்று
நீ வென்ற மனங்களை விட்டு
சென்றிடத்தான் முடியுமோ
தூண்டில் மீனாய் துடிக்கின்றோமம்மா
மற்றவர் துயர்கண்டு துடிப்பவளே!
உந்தன் செல்வங்கள் கதறுகின்றனவே..
அணைக்க மறந்ததேன் அவர்களை
என்ன தவறு செய்தனர் இம்மண்ணில்
மரணிக்க வில்லையம்மா நீரிப்போ
மெளனமாய் உறங்குகிறீர் கண்மூடி
பிரிவென்று உமக்கில்லை மண்ணில்
பரிவோடு எம்பக்கம் இருக்கின்றீர்
இப்படிதான் எண்ணிக் கொள்வோம்
போகும் வழியில் நாமினையும் வரை!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்