யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை வென்செஸ்லோஸ் அரியநாயகம் அவர்கள் 12-08-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சேவியர் அப்புத்துரை, அன்னமரியா முத்தம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், முருகேசு கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இஸ்ரெலா பராசக்தி(முன்னாள் முகாமையாளர் நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு கிராமிய வங்கி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுவேந்திரனி(ஐக்கிய அமெரிக்கா), நிஷாந்தினி(பிரித்தானியா), விஜி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சதீஸ்(பிரித்தானியா), ஸ்ரீதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுபதாஹினி அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,
மிஷாலினி, அப்சரா, ஆர்ணா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 14-08-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, மு.ப 07:30 மணியளவில் புனித அடைக்கல அன்னை தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, மு.ப 11:30 மணியளவில் நெடுந்தீவு தேவானந்தா கலாசார மண்டபத்தில் நிகழும் இரங்கல் நிகழ்வு நடைபெற்று பின்னர் ந.ப 01:30 மணியளவில் நெடுந்தீவு புனித பிரான்சிஸ்கு சவேரியார் தேவாலயத்தில் ஆத்மசாந்தி திருப்பலி நடைபெற்று அதனைத்தொடர்ந்து கட்டராமன் சல்லி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.