யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை வென்செஸ்லோஸ் அரியநாயகம் அவர்கள் 12-08-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சேவியர் அப்புத்துரை, அன்னமரியா முத்தம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், முருகேசு கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இஸ்ரெலா பராசக்தி(முன்னாள் முகாமையாளர் நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு கிராமிய வங்கி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுவேந்திரனி(ஐக்கிய அமெரிக்கா), மனோஜ்(ஐக்கிய அமெரிக்கா), நிஷாந்தினி(பிரித்தானியா), விஜி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜான்சி(ஐக்கிய அமெரிக்கா), சதீஸ்(பிரித்தானியா), ஶ்ரீதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனும்,
தெய்வேந்திரம் மகேஷ்வரி(Canada), காலஞ்சென்றவர்களான புனிதமணி, சத்தியபால், அருந்ததி ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகநாதன்(ஓய்வுநிலை அதிபர்), மேரிப்பிள்ளை மேரியோசப்பின், ஆறுமுகம் வைத்தியநாதன்(ஓய்வுநிலை அதிபர்), செல்லம்மா சிகாமணி, சோமுசுந்தரம்(ஓய்வுநிலை அதிபர்), தெய்வானைப்பிள்ளை, வேலுப்பிள்ளை வள்ளியம்மை(புளியடி ஆச்சி), ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்ற பண்டிதர் ஆசிநாதர்(ஓய்வுநிலை பண்டிதர் பெனடிக்ட் மாஸ்டர்) அவர்களின் மருமகனும்,
நிமா(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான அரசி, ஸ்ரனி மற்றும் விஜி(பிரித்தானியா), சபா(நோர்வே), காலஞ்சென்ற தர்ஷலிங்கம், ஶ்ரீபத்மநாதன், காலஞ்சென்ற சுவாமிநாதன், தனலட்சுமி, ஜெயலட்சுமி, குணரதனம், காலஞ்சென்ற ஜெயநாதன், பாக்கியலட்சுமி, கலாவதி, மனோவதி, ஜெயவதி, புஸ்பவதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
மிஷாலினி, ஈலைஷா, எமி, ஜெயல், ஐசேயா, அப்சரா, ஆர்ணா ஆகியோரின் அன்புப் பேரனும், மடலின் ஆரியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இல. 100, 4ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர் 14-08-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் யாழ். புனித அடைக்கல அன்னை தேவாலயத்தில் இராங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, மு.ப 11:00 மணியளவில் நெடுத்தீவு தேவானத்தா கலாசார மண்டபத்தில் இரங்கல் நிகழ்வு நடைபெற்று, பி.ப 01:30 மணியளவில் நெடுந்தீவு புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயத்தில் ஆத்ம சாந்தி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கட்டராமன் சல்லி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.