யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி அக்கராயன் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனிஅருட்குமார் கிருஸ்னபகவதி அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்கள் வாழ்க்கையில் இத்தனை பெரிதாக ஒரு வலியை இதுவரை நாங்கள் உணர்ந்ததில்லை எங்கள் உயிரான அம்மாவை இன்று நாங்கள் இழப்பேம் என நினைத்து கூட பார்க்கவில்லை அம்மா 29-07-2020 புதன்கிழமை அன்று பி.ப 4:00 மணியளவில் திடிரென எங்கள் உயிரான அம்மா எங்களை எல்லாம் விட்டு பிரிந்து விட்டார் அம்மா நீங்கள் அருகில் இருக்கும் வரை எதுவும் தெரியவில்லை ஆனால் இன்றோ உணர்கிறேன் எங்கள் வாழ்வில் மொத்த வண்ணங்கள் நீங்கள் என்று அம்மா.