

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி அக்கராயன் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனிஅருட்குமார் கிருஸ்னபகவதி அவர்கள் 29-07-2020 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அல்பிறட் றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்ரனிஅருட்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெனித்தா, ராஜன், கஜேந்திரன், டெனிஸ்குமார், பிருந்தா(பிரான்ஸ்), டனுசியா, வினோசியா, பிரசாந்தன், யூட்டிலக்சனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பரமானந்தன், விஜிதரன்(பிரான்ஸ்), துசிஜந்தன், பொன்சன்ராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கெமமெரிசா, மிதுன், திவ்ஜா, அபிஸ்ஷா, ஷாமிரா, வெஷாந், யோமிரா, கிருணிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-07-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அக்கராயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.