

யாழ். வேலணை கிழக்கு வேலணை 5ம் வட்டாரம் சிவநிலையத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னபூரணம் சாந்தலிங்கம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா..!!
தந்தையும் தாயும் ஆனாய் தரணியில் தெய்வமானாய்
விந்தையே புரியும் நல்ல வித்தகி ஆனாய் அம்மா
எத்தனை கலைகள் உந்தன் கைகளில் அடக்கி வைத்தாய்
சத்திய வழிதான் வாழ்க்கை என்றுமே உணரவைத்தாய்
முப்பது வயதில் உந்தன் துணையினை இழந்தபோதும்
அப்பாவை இழந்த எங்கள் அறுவரை வாழவைக்க
எப்பாடு பட்டாயோ எமக்கன்று புரியவில்லை
முப்போதும் தனித்து நின்று முழுச் சாதனை படைத்தாயம்மா
அனைத்திலும் எமக்கு நல்ல அறவழி காட்டி நின்று
தினைத்துணை ஏதும் இன்பம் உனக்காக்கிக் கொள்ளாமல் நீ
பணத்தினை விரும்பிடாத துறவிபோல் கணத்திலும் இறைவன்
தன்னை மறக்காமல் உலகவாழ்வை எமக்காக வாழ்ந்தாயம்மா
எவருக்கும் கிடைத்திடாத பொக்கிசம்
நமக்கிங்கு அம்மாவாகக் கிடைத்ததில் பெருமையுற்றோம்
உமக்கு நாம் ஒன்றுரைப்போம் உன்னைப்போல் யாரும் உலகில்
தமக்கில்லை என்று அன்று ஏங்குதல் கண்டோம் அம்மா
சத்திய வழியில் வாழ்ந்த சாதனைப் பெண் நீயம்மா
உத்தமி ஆன உன்னை உலகமே வியக்கும் வண்ணம்
வைத்திட ஆசை கொண்டோம் வையகம் விட்டுச் சென்றாய்
எத்தனை பிறவியிலும் எங்களின் தாய் நீ அம்மா
உண்மையும் நேர்மையும்தான் உலகில் நல்வாழ்வளிக்கும்
என்பதை எமக்கு ஊட்டி தர்மத்தின் வழி நடக்க
கண்ணுறங்கும் போதெமக்கு காவியக் கதைகள் சொல்லி
விண்ணையே சாடும் தமிழ் மன்னர்
புகழைச் சொன்னாய்
தாயென்று உன்னைச் சொல்ல முடியவே முடியாதம்மா
தாயினும் மேலாய் நின்று சத்திய வழியில்வாழ
தெய்வமே எங்களுக்குத் தாயாகி வந்ததம்மா
மெய்யிலே எமைச் சுமந்தாய் நெஞ்சிலே உமைச்சுமந்து
நித்தமும் நினைந்து இங்கே தொழுகின்றோம் எங்கள் தாயே
சித்தத்தில் சிவனை வைத்து தினம் தினம் வணங்குநின்றாய்
முத்தங்கள்கொடுத்து உந்தன் மடிமீது சாய ஆசை
எத்தனை துன்பம் தானும் அதில் பறக்குமே எங்கள் அம்மா
என்றும் உங்கள் நினைவுகளுடன்
பிள்ளைகள்- அம்பிகா இராஜலிங்கம்(சுவிஸ்),
சிவநாதன் சாந்தலிங்கம்(லண்டன்), லதா ராஜன்(பிரான்ஸ்)