5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அன்னபூரணம் முத்துலிங்கம்
ஓய்வுபெற்ற தாதி மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்
வயது 88
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு களுதாவளைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, மட்டக்களப்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னபூரணம் முத்துலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உள்ளமுருகி எமை உயிரோடு
அரவணைத்த பண்புமிகு தெய்வமே!
பாசத்தின் உறைவிடமே
உங்களைப் பார்ப்பது இனி எக்காலம்?
காலங்கள் மாறினாலும்
கனவுகள் சென்றாலும் உங்கள் கோலமுகமும்
உதட்டோரப் புன்னகையும் என்றும் மாறாது!
ஒரு உன்னதமான தெய்வம் நீ அம்மா
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் உங்களின்
பாசத்திற்கு நாம் பட்ட கடன் தீராதம்மா
ஆனால் முழு நினைவாக
உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா
துன்பம் துயரம் தெரியாமல்
எம்மை எல்லாம் ஆழாத்துயரில்
ஆண்டுகள் ஐந்து ஆனதம்மா
ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட இருந்தாலும்
நம் உள்ளத்தின் உள்ளே வளரும்
உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.....
தகவல்:
குடும்பத்தினர்