யாழ். வரணி இடைக்குறிச்சி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அண்ணாமலை இரத்தினசிங்கம் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகளும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் அதிகாலை 05:00 மணியளவில் நடைபெறும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 25-08-2021 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும் அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.