யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட அன்பழகி இராசேந்திரம் அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்,
உன்னுடையது எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய்?
அதை நீ இழப்பதற்கு,
எதை நீ படைத்திருந்தாய்,
அது வீணாகுவதற்கு,
எதை நீ எடுத்துக்கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது,
எதைக் கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது,
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது,
மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 16-03-2022 புதன்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 18-03-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்களும் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்