”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு”
எமது குல விருட்சத்தின் ஆணிவேரறுந்து மண்ணில் சாய்ந்த செய்தி கேட்டறிந்தும், இணையத்தளத்தில் பார்த்தறிந்தும், ஆறாத்துயரில் இருந்த எமக்குத் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தொலைபேசி, மின்னஞ்சல் மூலமும் நேரிலும் தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களிற்கும் நன்றிகள்.
அன்னாரின் ஆத்மா சாந்தி வேண்டி, தெய்வீகப் பாடல்களையும், தேவாரங்களையும், பாடி மன அமைதி கொடுத்தவர்களுக்கும் நன்றிகள்.
வீட்டிற்கும், பார்வையிடத்திற்கும் வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும் நன்றிகள் மயானம் வரை வந்து இறுதிக்கிரியைகளில் பங்கு கொண்ட பாசநேசங்களை வெளிக்காட்டிய அனைவருக்கும் நன்றிகள். உணவுகள் வழங்கிய அன்புள்ளங்களிற்கும் நன்றிகள். 31ம் நாளன்று ஆத்மசாந்திப் பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ நன்றி கூறத் தவறியிருந்தால் அனைவருக்கும் எமது உள்ளம் கனிந்த நன்றிகளைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.