Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 JUN 1932
இறப்பு 03 SEP 2019
அமரர் அம்பலவாணர் இராசமணி 1932 - 2019 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம் 5ம் யூனிற்றை வதிவிடமாகவும், பிரான்ஸ் Bagneux ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் இராசமணி அவர்கள் 03-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பையா, தங்கம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற அம்பலவாணர் அவர்களின் அன்பு மனைவியும்,

பாலச்சந்திரன்(சந்திரன்- சுவிஸ்), திருச்செல்வம்(தவம்- பிரான்ஸ்), பாலசரஸ்வதி(சறோ- இலங்கை), பிறேமசாந்தி(சாந்தி- பிரான்ஸ்), காலஞ்சென்ற கோபலகிருஷ்னன்(கண்ணன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயசீலி(வரதா- கனடா), லலிதாம்பாள்(லலி- பிரான்ஸ்), நாகேந்திரராஜா(இலங்கை), சிவனேஸ்வரன்(நேசன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை(உருத்திரபுரம்), பாக்கியம்(வட்டக்கச்சி) மற்றும் பொன்னுத்துரை(திருவையாறு), சற்குணம்(கிளிநொச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பூரணம், காலஞ்சென்ற துரைராஜா, இரத்தினபூபதி, முத்துக்குமாரு, காலஞ்சென்ற சிவயோகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற அமிர்தலிங்கம் அவர்களின் அன்புச் சகலியும்,

சர்மிலன், பவித்திரன், துவாரகா, டிஷாந்த், வர்மிதா, பார்த்திபன், பத்மகௌரி- காண்டீபன், ஜவிதா, சர்மிலி, பிரதிகா, ஹரிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஷஸ்மிகா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்