Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 26 JAN 1930
மறைவு 30 DEC 2024
திருமதி ஆச்சியம்மா செல்லத்துரை
வயது 94
திருமதி ஆச்சியம்மா செல்லத்துரை 1930 - 2024 இணுவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கு, பிரித்தானியா லண்டன் Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆச்சியம்மா செல்லத்துரை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

முகத்தைக் காணும் முன்பே
நேசிக்கத் தெரிந்தவளே
துன்பம் துயரம் அறியாது
எமை அன்போடு வளர்த்தவளே

உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தந்த எம் தெய்வமே
பண்பின் உயர்விடமாய் பாசத்தின்
பிறப்பிடமாய் அன்பிற்கு இலக்கணமாய்
இருந்த எம் குலவிளக்கே

பத்து மாதம் பாடுபட்டு பத்தியங்கள்
பல காத்து பத்திரமாய் எமைப்
பெற்றெடுத்தவளே

ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் அன்னயே உனைப்போன்று
அன்பு செய்ய யாரும் இல்லையே
இவ்வுலகில்....

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்..

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் ந.ப 01:00 மணிவரை London Ayyappan Temple, 36 Mason Avenue, Harrow, Middlesex, HA3 5AR எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் மதியபோசனம் ந.ப 01:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை நடைபெறும். உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Parking:
Harrow Leisure Centre Car Park, HA3 5BD
Palmerston Road Car Park, HA3 7AB

இங்ஙனம், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்
Tribute 17 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்