நிழல் போல் இருந்தவள் நீ
நினைவாய் மாறினாய்......
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர் துளியாகினாய்......
இதயங்கள் எல்லாம் நொறுங்க
இமைகள் எல்லாம் நனைய.
எங்களை தவிக்க விட்டு
எங்கோ நீ பயணமானாய்....
உன் சிரிப்பு சத்தமோஅல்லது
உன் அழுகை சத்தமோ தெரியவில்லை
இறைவன் உன்னை தன்வசமாக்கிக் கொண்டான்
என்றாவது ஓர் நாள்
எங்கோ ஓர் இடத்தில்
நாம் சந்தித்துக் கொள்வோம்
என்றும் உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிராத்திக்கின்றோம்.
(ரவிச்சந்திரன் கவிதா)
ர.றம்சிகா
ர.நிதர்சனா
ர.கபில்
ர.யெனிற்றன்
Please accept our condolences, just know that we here for you, and please do not hesitate to reach out, especially during this difficult time.