Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 17 JUN 1932
மறைவு 17 JAN 2023
அமரர் கந்தையா நாகராஜா
SNK முன்னாள் கடை உரிமையாளர், தம்பதெனிய
வயது 90
அமரர் கந்தையா நாகராஜா 1932 - 2023 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வேலணை, தம்பதெனிய, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  கந்தையா நாகராஜா அவர்கள் 17-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தாா்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னபூரணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நளினி(லண்டன்) மற்றும் நந்தினி(இந்தியா), சாந்தினி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜயகரன்(லண்டன்), அசோகன்(இந்தியா), சண்முகமணி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பூமணி, அரசரட்ணம், செல்வரட்ணம் மற்றும் கனகாம்பிகை(கனடா), ராஜேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான முத்தையா, லட்சுமிபிள்ளை, கந்தையா, மகாதேவன், செல்லம்மா, சண்முகம், குமரையா, சிவஞானம், கந்தசாமி, மங்கயற்கரசி மற்றும் அன்னலட்சுமி(கனடா), பத்மாவதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கார்த்திகா, அனோசன், அஷ்யன்(லண்டன்) Dr. காவியா, அகல்யா(இந்தியா), மாதங்கி, அஷ்வின், அநிஷா(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18-01-2023 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் (இல.591. காலி வீதி, கல்கிசை) இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 03:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜயகரன்(நளினி) - மருமகன்
நந்தினி அசோகன் - மகள்
சாந்தினி சண்முகமணி - மகள்