5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் யோகேஸ்வரி முருகானந்தா
(பேபியக்கா)
அரச உத்தியோகத்தர்- கம்பளை நீதிமன்றம், கொழும்பு துறைமுக ஆணைக்குழு, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், யாழ் சிறுவர் நன்னடத்தை திணைக்களம், யாழ் தொழில் நுட்ப கல்லூரியில் வருகை விரிவுரையாளராகவும் கடமையாற்றியவர்
வயது 69
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கொக்குவில் பிரம்படி லேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோகேஸ்வரி முருகானந்தா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
கல்வியில் சிறந்து விளங்கினீர்கள்
அரச தொழிலில் உங்கள் கடமையை சரிவர செய்தீர்கள்
பத்து சகோதர, சகோதரிகளையும் அன்புடன் அரவணைத்தீர்கள்
அயலவர், உறவினர்களை அன்புடன் ஆதரித்தீர்கள்
பெற்றோரை யுத்த காலத்திலும் கடைசிக் காலத்தை
சிறப்பாக வாழ உங்களால் முடிந்தளவு
கடமையை செய்தீர்கள்
உங்கள் ஆன்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
ந. ஈஸ்வரராஜா