20ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோகரத்தினம் செல்லம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இருபது அகன்றோடி
விட்டாலும்
அழியாத நினைவலைகள்
எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து
வதைக்கிறதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?
ஏற்றமுடன் நாம் வாழ ஏணியாக இருந்து
எம்மை வழிநடத்த வேண்டும் அம்மா!
பாசத்தை அள்ளிக் கொடுத்தாய்
அன்பால் அரவணைக்க
கற்றுக் கொடுத்தாய்!
இரவெல்லாம் விளக்காக
விழித்திருந்து
எமக்காய்
உன் உறக்கம் துறந்து
மகிழ்ந்திருந்தாய் அம்மா…!
திருப்ப முடியாத காலத்தை
உங்கள் நினைவுகளுடனும்
நிழல்ப்படத்தினூடாகவும்
திரும்பிப்பார்க்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்