முல்லைத்தீவு தண்ணீரூற்று மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விவேகானந்தராசா தவமலர் அவர்களின் அந்தியேட்டி வீட்டுக் கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 04-01-2022செவ்வாய்க்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக் கரையில் அந்தியேட்டிக் கிரியைகள் நடைபெற்று 05-01-2022 புதன்கிழமை அன்று மதியம் தண்ணீரூற்றில் உள்ள அவரது இல்லத்தில் வீட்டு கிரியைகள் நடைபெற உள்ளதால் வீட்டுக்கிரியை நிகழ்விலும் மதிய போசனத்திலும் கலந்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
Our heartfelt deepest condolences! Siva&Latha family Canada