யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வன்னேரிக்குளத்தை வதிவிடமாகவும், வவுனியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வநாதன் பத்மநாதன் அவர்கள் 30-01-2026 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், தூய திருதனிநாயக முதலியார் வழித்தோன்றலும், காலஞ்சென்ற மணியாகரன் கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான விஸ்வநாதன் செங்கமலம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
யாழினி, பிரதீபன், நித்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தயாகரன், சுதர்ஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற ஜெகநாதன், தனலட்சுமி, காலஞ்சென்ற ஜெயலட்சுமி, தில்லைநாதன், இராஜலட்சுமி, சீதாலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற இலட்சுமி, திருநாவுக்கரசு, காலஞ்சென்ற இராசேந்திரம், ஜெயபாலசிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,
நிவர்சன், பவிஷ்னா, அக்சரா, வித்தகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details