யாழ். தலையாழியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி சிவபாதசுந்தரம் அவர்களின் அந்தியேட்டிக்கிரியை அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 04-02-2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் வீட்டுக்கிருத்தியக் கிரியை 06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெறும், அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோனத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் துயரில் பங்குகொள்ளும். ஜெகநாதன் குடும்பம் பிரம்படி லேன் கொக்குவில்