
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Grevenbroich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரன் திருஞானம் அவர்கள் 29-06-2019 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தையலம்மை தம்பதிகள், கணபதி ஆறுமுகம் தில்லைவனம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற திருஞானம், கமலம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
காலஞ்சென்ற சத்தியா, விஐயகுமாரி ஆகியோரின் அன்புக் கணவரும்,
சஜந்தன், சஜந்தனி, தனுஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற றஞ்சிதமலர், லோகமலர்(ஜேர்மனி), புஸ்பராணி(ஜேர்மனி), பத்மசீலன்(அனலைதீவு), பாஸ்கரன்(கனடா), காலஞ்சென்றவர்களான அகிலன், கேதீஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவராசா(கனடா), காலஞ்சென்ற கிருபாமூர்த்தி, பரமேஸ்வரன், கலாமதி மற்றும் சசி(ரஞ்சன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி கமலாம்பிகை, குமரேசன் லலிதாதேவி, மற்றும் தில்லையம்பலம் ராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், சியாமளாவல்லி தம்பதிகள், காலஞ்சென்ற நவரெட்ணம், யோகராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவா, பிரியா, பிரவீனா, தேன்கவி, காலஞ்சென்ற வசந்தரூபன், நிஷாந்தி, சகானா, சபினா, பிரியங்கா ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,
லோகதர்சன், பவித்திரா, பவிதா, சிந்துசன், சயானா, ஐக்லின் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.