5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் விக்னராஜா சாரங்கன்
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவன்
வயது 22
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விக்னராஜா சாரங்கன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு என்னும் பறவை
சிறகடித்து வானில் பறந்தது!
விதி என்னும் அம்பினால்
அது அடிபட்டு மாய்ந்தது!
கண் நிறைந்த நீரோடு...!
உம் கனவு சுமந்த நெஞ்சோடு...!
இரத்த கண்ணீர் வடித்து தேடுகின்றோம்!
எங்கு சென்றாய் மகனே....?
கிளை விரித்த மரத்தில்.....
ஒரு கூடு கட்டி அழகிய குடும்பமாய்
வாழ்ந்து வந்தோம்....
நீ இல்லாத இடைவெளியை
எண்ணி எண்ணி ஏங்குகின்றோம்
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும்
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே
நீ வாழ்வதை நாம்
உணருகின்றோம் இக் கணமும்
உங்கள் நினைவால் துயருகின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் தவிர்க்க முடியாத பேரிழப்பால் வாடி வதங்கி நிற்கும் அவரது பெற்றோர்கள், சக உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக கண்ணீர்...